என்னை விட யாரும் ஐஸ்வர்யா கேரக்டரை நல்ல பண்ண முடியாது-செம்பருத்தி ஜனனி .!

Published by
Ragi

என்னை விட யாரும் செம்பருத்தி சீரியலில் வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை நன்றாக பண்ண முடியாது என்று ஜனனி தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரில் மிகவும் பிரபலமான தொடர் செம்பருத்தி.  இதில் அகிலாண்டேஸ்வரியாக பிரியா ராமன் ,இரண்டு மகன்களாக கார்த்திக் ராஜ்,கதிர் மற்றும் இருண்டு மருமகள்களாக ஷபானா மற்றும் ஜனனி அசோக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் .

சமீபத்தில் இந்த சீரியலிலிருந்து ஜனனி விலகியதாக தனது யூடுயூப் சேனனில் அழுது கொண்டே வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் .அதில் இனி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும், கால்ஷீட் பிரச்சினை காரணமாக செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கியதாகவும் ,,  ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என்றும், இனி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு ஆதரவு கொடுங்கள் என்றும்,  திடீரென நீக்கப்பட்டது தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி கதறி அழுதிருந்தார் .

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் விளக்கமளித்த ஜனனி ,லைவ்வில் ரசிகர்களிடம் அழகு குறிப்புகள் பேசி கொண்டிருந்த போது செம்பருத்தி தொடரில் இருந்து தனக்கு போன் செய்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்ற கூறிய போது ஏற்று கொள்ள முடியாமல் அழுததாகவும், அன்று முழுவதும் தான் அழுததாகவும்,  விரைவில் அதிலிருந்து வெளி வருவேன் என்றும் , தனக்கு அந்த தொடர் நிறைய கற்று தந்ததாகவும் , நண்பர்களை தான் அதிகமாக மிஸ் பண்ணுவேன் என்றும் கூறினார் . மேலும் கூறிய அவர் அந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தன்னை தவிர யாராலும் நன்றாக பண்ண முடியாது என்று தெரிவித்துள்ளார் . மேலும் தான் அழுத போது எனக்கு ஆதரவளித்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

16 minutes ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

1 hour ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

1 hour ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

3 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

10 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

11 hours ago