தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சுங்-இன் , அதிபர் கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளார். இதனால் அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பல செய்திகள் உலா வந்தன.
கிம் ஜாங் உன் கொரோனா வைரசால் தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என அல்ஜஜீரா செய்தித் நிறுவனம் தெரிவித்தது.கிம் இறந்துவிட்டதாக சமீபத்தில், ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியாகும் அதிகாரபூர்வமற்ற செய்திகளுக்கு , அதிபர் கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தென் கொரியா உறுதியாக கூறியுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சுங்-இன் சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் , “எங்கள் அரசாங்க நிலைப்பாடு உறுதியானது”. கிம் ஜாங் உன் ஏப்ரல் 13 முதல் வொன்சன் பகுதியில் தங்கியிருக்கிறார். ஏப்ரல் 15 -ம் தேதி தனது தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடியதைத் தவறவிட்டதால் கிம் உடல்நலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு பொலிட்பீரோ கூட்டத்தில் காணப்பட்டார் என்று வட கொரிய அரசு ஊடகங்களான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 13 முதல், இதுவரை சந்தேகத்திற்கிடமான விவகாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் கூறினார்.
ஆனால், இந்த மாத தொடக்கத்தில் கிம் ஜாங் உன் நாட்டு மக்களை சந்திக்க சென்றபோது, நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்ததாக ஜப்பான் நாட்டு பத்திரிகைக்கு சீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் உன்னுடன் இருந்த மருத்துவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். ஒருவேளை வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்திருந்தால், வடகொரிய ஊடகங்கள் தெரிவித்தால் மட்டுமே அது உண்மையான செய்தி என்று நம்மால் கருத முடியும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…