ஒரே நாளில் ஒரு கோடி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்திய இந்தியாவுக்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதாவது, நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1,03,35,290 பேருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது கடந்த ஜனவரி 16 அன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து. நேற்று தான் அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை இந்தியாவில், 62,29,89,134 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மட்டும் நேற்று 28.62 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று கர்நாடகா 10.79 லட்சம், மகாராஷ்டிரா 9.84 லட்சம், ஹரியானா 6 லட்சம் மற்றும் மேற்கு வங்கம் 5.47 லட்சம் என நான்கு மாநிலங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

பீகார் (4.98 லட்சம்), குஜராத் 4.89 லட்சம், கேரளா 4.84 லட்சம் மற்றும் ராஜஸ்தான் (4.59 லட்சம்) நான்கு மாநிலங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளும், தமிழ்நாடு 3.73 லட்சம், ஆந்திரா 3.24 லட்சம், ஒடிசா 2.67 லட்சம் மற்றும் அசாம் 2.5 லட்சம் என மூன்று மாநிலங்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 62.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ள நிலையில், 49.08 கோடி முதல் டோஸ், 14.08 கோடி இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நிறுவனர் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி, இந்த மகத்தான மைல்கல்லை எட்டிய இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். அரசு, ஆர் & டி நிர்வாகம், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் கூட்டு முயற்சிகள் காரணமாக இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago