இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவர் பட்ஜெட் குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி போன்ற மிகவும் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமே சென், பார்த்திபன், போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் படத்திற்கான படப்பிடிப்பை 2024 ஆம் ஆண்டு தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது என்றே கூறலாம்.
இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவர் பட்ஜெட் குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இதில் ” ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி தான். ஆனால் இது ஒரு மெகா பட்ஜெட் படம் என்று மக்களிடம் காண்பிப்பதற்காக 32 கோடி பட்ஜெட் என்று அறிவித்தோம். என்ன ஒரு முட்டாள்தனம் படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும் அது சராசரி படமாகக் கருதப்பட்டது. முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…