மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின், ஒரு மாத காலம் பொது முடக்கத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சில நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின், ஒரு மாத காலம் பொது முடக்கத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். அதன்படி மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழிபாட்டுத்தலங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்றும், கல்வி நிலையங்கள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஈத் பண்டிகையின்போது பொதுமக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கமானது, நாளை முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…