அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்பவர் கொரோனா காலத்தில் தத்தளிக்கும் சிறு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கடன் தொகையை முறைகேடாக பெற்று அதனை கொண்டு ஒரு புதிய லம்போகினி காரை வாங்கியுள்ளார்.
கொரோனா காலத்தில் சிறு நிறுவனங்களை காக்கும் நோக்கில் கடன் வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியது. Paycheck Protection Program என்கிற பெயரில் இந்த கடன் வழங்கப்படுகிறது.
இந்த கடனை பெற டேவிட் ஹைன்ஸ் வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். 3 விண்ணப்பங்களை வெவ்வேறு வங்கிகளுக்கு 13.5 மில்லியன் கடன் பெற கொடுத்துள்ளார். அதில் 4 மில்லியன் கடன்தொகையை பெற்றுள்ளார்.
கடன் பெற்று அதனை கொண்டு, 318,000 டாலர் மதிப்புள்ள புதிய லம்போகினி ( Lamborghini Huracan sports car ) சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் பிறகு தான், டேவிட் ஹைன்ஸ் தாக்கல் செய்த அனைத்தும் போலி ஆவணங்கள் என தெரியவந்தது. இதனை அடுத்து, டேவிட் ஹைன்ஸ் மீது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, போலி ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்ப்பட்டார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…