உபர் ஓட்டுநர்கள் மீது‌ 2 வருடத்தில் 6000 பாலியல் புகார்கள்..! அதிர்ச்சி கொடுத்த உபர்..!

Published by
murugan
  • 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் கார்களில் பயணம் செய்துள்ளதாகவும் உபர் நிறுவனம் கூறியது.
  • அதில் கடந்த 2018 -ம் ஆண்டு சுமார் 3,000 பாலியல் புகார்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததாகவும் இந்த புகார்கள் கடந்த 2017-ம் ஆண்டு விட 16 சதவீதம் குறைந்துள்ளது என உபர் நிறுவனம் கூறியுள்ளது.

உபர் நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த கார் நிறுவனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் பாலியல் தொந்தரவு ஆளாக்கப்படுவதாகவும் பல நாடுகளில் இருந்து பல புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து லண்டன் மற்றும் சில  நகரங்களில் உபர் நிறுவனத்தின்  கார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2018 -ம் ஆண்டு சுமார் 3,000 பாலியல் புகார்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததாகவும் இந்த புகார்கள் கடந்த 2017-ம் ஆண்டு விட 16 சதவீதம் குறைந்துள்ளது எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் கார்களில் பயணம் செய்துள்ளதாகவும் அந்த  நிறுவனம் கூறியது.அதில் 5,981 பயணிகளிடமிருந்து பாலியல் துன்புறுத்துதல் தொடர்பான புகார்கள் பதிவாகி உள்ளதாக உபர்  நிறுவனம் கூறியது. இருப்பினும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

2 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

2 hours ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

3 hours ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

4 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

4 hours ago