கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதையும் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என்று நான் கூறியதற்கு, சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்தனர்’ என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா சிதம்பரம் நாடு முழுவதையும், 2 -4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்கின்றனர். இத்தாலியிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கடும் நடவடிக்கைகள் தான் கொரோனா பாதிப்பை தடுக்கும் என்றும் மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை வரவேற்று பதிவிட்டுள்ளார்.அதில் என் போன்றோரின் யோசனையை ஏற்று, மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த, தமிழ்நாடு உட்பட்ட மாநில அரசுகளுக்கு என் பாராட்டுக்கள் மற்றும் நன்றி. இந்த முழு ஊரடங்கைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். மிக முக்கியமாகப் பெரிய கிராமங்கள், பேரூர்கள், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இவற்றை கடுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டினாலும் தமிழக அரசு துணிவுடன் செயல்படவேண்டும். என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…