நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமான உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், அங்கு போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும், கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகம் என்றும், இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், தற்போது இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் தற்போது பறிமுதல் செய்துள்ளது. மேலும், போதைப் பொருட்களை கடத்தியதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை வரலாற்றில் அதிக போதைப்பொருள் பிடிப்பட்டது பொதுமக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…