விடுவிக்கப்பட்ட பயங்கரவாதி மசூத் அசார் ? இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு

Published by
Venu

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த பதற்றம் ஓய்ந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கடந்த சில தினங்களுக்கு முன்  தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.மவுலானா மசூத் அசார், ஹபீஸ் சயித், சாகி ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பேரை  பயங்கரவாதிகளாக அறிவித்தது.

இந்த நிலையில் தான் சிறையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

7 minutes ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

17 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

23 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

1 hour ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

2 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago