பாகிஸ்தான் விமான விபத்து: கொரோனா நிலைமை குறித்து விவாதித்த விமானிகள் “கவனம் செலுத்தவில்லை” என அமைச்சர் குற்றசாற்று

Published by
Surya

கடந்த மாதம் விபத்துக்குள்ளான பிஐஏ விமானத்தின் விமானிகள், விமானம் இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை எனவும், விமானம் இயக்கம் போது கொரோனா வைரஸ் குறித்து விவாதித்ததாக பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தான், லாகூரிலிருந்து கராச்சியை நோக்கி மே மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான PK-8303 விமானம் புறப்பட்டது. அந்த விமானம், கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே வந்தபோது, திடீரென விமான நிலையத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு இடையே விழுந்து, தீப்பிடித்து எரிந்து விபத்துக்குளானது.

அந்த கோர விபத்தில் 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக, 2 பேர் அந்த விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் தப்பினர். அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விமானத்துறை அமைச்சர், விமானிகள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சர் குற்றம் சாற்றினார். அவர்கள் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை எனவும் விமானம் பறக்க 100 சதவீதம் பொருத்தமானது, தொழில்நுட்பக் குறைபாடு எதுவும் இல்லை என அமைச்சர் கூறினார்.

மேலும் இந்த விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை, இன்னும் ஒரு வருட காலத்திற்குள் முழுமையான சமர்ப்பிக்கப்படும் என உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, விமானத்தை தரையிறக்க முயன்றபோது, விமானிகள் கொரோனா வைரஸ் குறித்து விவாதித்து வருவதாக அவர் கூறினார்.

பைலட் மற்றும் கோ-பைலட் விமானத்தை இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை. அவர்களின் உரையாடல் முழுவதும் கொரோனா வைரஸைப் பற்றியதாக இருந்ததாக கூறினார். விமானம் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது, ​​அவர்களை கட்டுப்பாட்டாளர் எச்சரித்தார். ஆனால் விமானி, “நான் பார்த்துக்கொள்கிறேன்” என கூறி, மீண்டும் அவர்கள் கொரோனாவைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர். விமானிகளின் இந்த அலட்சியமே விமானம் விபத்துக்குள்ளாகி, 99 பேர் உயிரை காவுவாங்கியதாக விமான போக்குவரத்துக்குத்துறை அமைச்சர் ஹஸான் நாஸிர் ஜாமிர் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

1 minute ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

31 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

1 hour ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

2 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago