போருக்கு நடுவில் ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இரண்டு நாள் பயணமாக (பிப்ரவரி 23-24) ரஷ்யா சென்றார். 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் மாஸ்கோவிற்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். உக்ரைன் மீது போர் தொடுக்க அறிவித்ததை தொடர்ந்து, நேற்று மூன்று மணிநேர சந்திப்பு கிரெம்ளில் நடந்தது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கூறப்பட்டது.

சந்திப்புக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஷ்மீர் விவகாரம் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது என்றும் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குறித்து வருத்தம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் நிலைமை குறித்து, IIOJK (இந்திய சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர்) மனித உரிமைகள் நிலைமையை பிரதமர் எடுத்துரைத்தார்.  ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் லாகூர் மற்றும் சிம்லா ஒப்பந்தங்களை மாஸ்கோ மட்டுமே பின்பற்றும் என்று இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் கூறிய சில வாரங்களில், இது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கிரெம்ளினில் அமர்ந்து ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார். அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது முதல் உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு அமைதியான தீர்வுக்கான “இன்றியமையாதது” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

20 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

1 hour ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

2 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

6 hours ago