7 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு காணாமல் போன தென்கொரிய சியோல் நகர மேயர் பார் வோன் சூன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் ஆளும் இடது கட்சியை சேர்ந்த பார்க் வோன் சூன் கடந்த ஆண்டுகளாக 3 முறை சியோல் நகர மேயராக பணியாற்றி வந்தவர்.மேலும் தென்கொரிய அதிபர் தேர்தலுக்கு இவர் போட்டியிட அதிக வாய்ப்புகள் கணிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது தந்தையை காணவில்லை என்று பார்க்கின் மகள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும் போலீசில் அளித்தார். புகாரை அடுத்து 600க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பார்க்கின் செல்போன் சிக்னல், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றின் உதவியோடு சுமார் 7 மணி நேரமாக நிலவி வந்த இந்த தேடலில் மேயர் பார்க் வோன் சூன் பற்றி தகவல் வெளிவந்தது.
தேடலில் சியோலின் வடக்கு பகுதியில் பார்க்கின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.உயிரிழந்த பார்க் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கடத்தி அவரை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…