ஃபைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசிக்கு கோஃபெரிஸ் அவசர அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று துணை சுகாதார மந்திரி ஹ்யூகோ லோபஸ் – கேடெல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைராசை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காயாவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நிலையில், இந்த தடுப்பூசி வெற்றியையும் கண்டுள்ளது.
இந்நிலையில், ஃபைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசிக்கு கோஃபெரிஸ் அவசர அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று துணை சுகாதார மந்திரி ஹ்யூகோ லோபஸ் – கேடெல் ஒரு செய்தி மாநாட்டில் கூறியுள்ளார். இதனையடுத்து, மெக்சிகோ ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நாங்காவது நாடாகும். ஏற்கனவே, பிரிட்டன், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவின் அரசாங்கம், ஏற்கனவே ஃபைசருடன் 34.4 மில்லியன் டோஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில், முதல் தொகுதி இந்த மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…