85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி-130 எனும் இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் போது கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்துள்ளது.
பிலிப்பைன்சில் உள்ள விமானப் படைக்குச் சொந்தமான c-130 எனும் ராணுவ சரக்கு விமானம் சுலுவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 85 பேருடன் கிளம்பிய இந்த விமானம் காலை 11.30 மணியளவில் இந்த ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானம் சுலுவில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரை இறங்கிய பொழுது விபத்தில் சிக்கி உள்ளதாகவும், இந்த விமானத்தில் இருந்த 85 பேரில் இதுவரை 40 பேர் வரை மீட்கப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், விமானம் எப்படி தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து முறையான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் விமானம் தரையிறங்கும் போது விழுந்து உடனடியாக தீ பற்றியதால் இந்த விபத்தில் பலர் இறந்து இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதி சிரிலிட்டோ சோபெஜானா அவர்கள் மீட்புப் படை வீரர்கள் விமானப்படை தளத்தில் களமிறங்கியுள்ளதாகவும், இந்த விபத்தில் இருந்து அதிக உயிர்களை காப்பாற்ற முடியும் என தாங்கள் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…