கொரோனாவுக்கான அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றை தொடர்ந்து, தற்பொழுது கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதுவும் கொரோனா அறிகுறி என நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் உலகளவில் இதுவரை 87,57,748 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,62,519 பேர் உயிரிழந்த நிலையில், 46,25,445 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கவில்லை. மேலும், இந்த கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள், இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஆகும்.
இதுமட்டுமின்றி, தற்பொழுது நோய் அறிகுறிகள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. அந்த வகையில், கண்கள் “இளஞ்சிவப்பு” (Pink) நிறமாக மாறினால், அது கொரோனா அறிகுறிகளில் ஒன்று என நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், கொரோனா பாதித்தோரில் 10-15 சதவீத மக்களுக்கு கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரான கார்லோஸ் சோலார்ட்டே கூறினார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…