கண்கள் “இளஞ்சிவப்பு” நிறமாக இருந்தால் கொரோனாவுக்கான அறிகுறி- புதிய தகவல்!

Published by
Surya

கொரோனாவுக்கான அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றை தொடர்ந்து, தற்பொழுது கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதுவும் கொரோனா அறிகுறி என நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் உலகளவில் இதுவரை 87,57,748 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,62,519 பேர் உயிரிழந்த நிலையில், 46,25,445 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கவில்லை. மேலும், இந்த கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள், இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஆகும்.

இதுமட்டுமின்றி, தற்பொழுது நோய் அறிகுறிகள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. அந்த வகையில், கண்கள் “இளஞ்சிவப்பு” (Pink) நிறமாக மாறினால், அது கொரோனா அறிகுறிகளில் ஒன்று என நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், கொரோனா பாதித்தோரில் 10-15 சதவீத மக்களுக்கு கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரான கார்லோஸ் சோலார்ட்டே கூறினார்.

Published by
Surya

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

35 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

3 hours ago