Robert Fico - PM Modi [File Image]
சென்னை : ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில், உள்ள ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ நேற்று ஹேண்ட்லோவா எனுமிடத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில் , மர்ம நபரால் சுடப்பட்டார். 5 முறை அவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு, ஹேண்ட்லோவா பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது அபாய கட்டத்தை கடந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ஃபிகோ மீதான துப்பாக்கி சூட்டிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடியும் தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஃபிகோ விரைவில் குணமடைய வேண்டும் எனவும், ஸ்லோவாக் நாட்டு மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…