பொன்னியின் செல்வனில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்?! வெளியான முக்கிய தகவல்!

Published by
மணிகண்டன்
  • பொன்னியின் செல்வன் கதையை மணிரத்தினம் திரைப்படமாக தற்போது இயக்கி வருகிறார்.
  • இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஜெயராம், விக்ரம்பிரபு ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை மணிரத்னமும் குமாரவேலும் இணைந்து எழுதியுள்ளனர். ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். மணிரத்னம் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமையமைக்க உள்ளார். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,  அமிதாப் என பலர் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர்களுக்கு என்ன கதாபாத்திரம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய கதாபாத்திரமான அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளாராம். கார்த்தி வந்தியதேவனாக நடிக்க உள்ளாராம். விக்ரம் கரிகாலச்சோழனாக நடிக்க உள்ளார் எனவும் படத்தின் மற்றொரு முக்கிய பெண் கதாப்பாத்திரமான நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம். திரிஷா குந்தவையாகவும், பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் நடிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பட ஷூட்டிங் தாய்லாந்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

10 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

47 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago