இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் அவரின் கனவு படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் ஊரடங்கிற்கு முன்னதாகவே தொடங்கியது. ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஏனைய இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால், பொன்னியின் செல்வன் படகுழுவும் ஷூட்டிங் கிளம்ப தயாராகி வருகிறது.
அதன்படி, இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
லண்டன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship…
சென்னை : ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம்…
லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…
இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில்…
சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத்…