அதிபர் டிரம்ப் ,மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும்- ஜோ பைடன்

Published by
Venu

அதிபர் டிரம்ப் மற்றும்  மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

 வால்டர் ரீட் ராணுவ மருத்துவமணையில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப் மற்றும் அவரது மனைவி குணமடைய வேண்டி உலக நாடுகளின்  தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் டிரம்பிற்கு எதிராக போட்டியிடும் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப்  விரைவாக குணமடைய வேண்டும் என்று  நானும்,எனது மனைவி ஜில்லும் விரும்புகிறோம். அதிபர்  மற்றும் அவரது குடும்பத்தினர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

4 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

6 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago