கொரோனாவிலிருந்து மீண்ட பின் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

Published by
லீனா

கொரோனாவிலிருந்து மீண்ட பின் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் பிரதமர் ஜான்சன்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்த கொரோனா வைரஸானது சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது. உலக அளவில் இதுவரை 38,20,656 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தை பொறுத்தவரையில், 2,01,101 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்சன் தீவிர சிகிச்சைக்கு பின் நம் நலம் பெற்றார். இவர், கொரோனா வைரஸிலிருந்து பூர்ணமாக குணமடைந்த பிறகு முதல் முறையாக புதன்கிழமை (நேற்று) ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் திரும்பினார். 

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று பாராளுமன்றத்தில், ஊரடங்கு தளர்வு குறித்து பேசப்படும் என்றும், நம்மால் விரைவாக வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். பின்னர் விரைவாக நாட்டின் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யலாம் என்றும், சமூகங்களுக்கு தேவையான உதவியைப் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

8 hours ago

தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…

9 hours ago

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…

11 hours ago

அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…

11 hours ago

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

12 hours ago

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

13 hours ago