கொரோனாவிலிருந்து மீண்ட பின் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

Published by
லீனா

கொரோனாவிலிருந்து மீண்ட பின் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் பிரதமர் ஜான்சன்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்த கொரோனா வைரஸானது சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது. உலக அளவில் இதுவரை 38,20,656 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தை பொறுத்தவரையில், 2,01,101 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்சன் தீவிர சிகிச்சைக்கு பின் நம் நலம் பெற்றார். இவர், கொரோனா வைரஸிலிருந்து பூர்ணமாக குணமடைந்த பிறகு முதல் முறையாக புதன்கிழமை (நேற்று) ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் திரும்பினார். 

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று பாராளுமன்றத்தில், ஊரடங்கு தளர்வு குறித்து பேசப்படும் என்றும், நம்மால் விரைவாக வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். பின்னர் விரைவாக நாட்டின் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யலாம் என்றும், சமூகங்களுக்கு தேவையான உதவியைப் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

6 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

6 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

7 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

8 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

9 hours ago