நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “அண்ணாத்த” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக ரஜினி தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனெனில், நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் பிரியங்கா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவில்லை என தகவல் பரவி வருகிறது. படத்தில் பிரியங்கா நடிக்கிறாரா இல்லையா என்பதை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகுதான் தெரிய வரும் அதுவரை பொறுமையுடன் காத்திருக்கலாம்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…