நடிகர் ராஜ்கிரணின் மகன் அவரது என் ராசாவின் மனசில படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசில ‘ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகமானவர் ராஜ் கிரண்.மீனா ஹீரோயினாக நடித்த இப்படத்தின் மூலம் தான் வடிவேலுவும் சினிமாவில் அறிமுகமானார் . இந்த நிலையில் தற்போது 30 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ராஜ் கிரண் அறிவித்துள்ளார்.இதனை ராஜ் கிரணின் மகன் இயக்க உள்ளதாகவும், இதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்கிரண் கூறியதாவது,இறை அருளால், இன்று என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள்.”என் ராசாவின் மனசிலே” இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்.அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…