ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் என் சினிமா வாழ்க்கையில், மிகவும் நெருங்கியவன் முக்கியமானவன் என்று நடிகர் பசுபதி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில்கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இந்த படத்தில் நடிகர் பசுபதி, ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் மிவும் பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பசுபதி கூறியது ” சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் பா.ரஞ்சித்க்கு நன்றி. என்னை ரங்கன் வாத்தியாரக செதுக்கியதற்கு நன்றி. ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் என் சினிமா வாழ்க்கையில், மிகவும் நெருங்கியவன் முக்கியமானவன். படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் & நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோ அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…