நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் சம்மதம் தெரிவித்தால் அதற்கான கதை ஒன்றை வைத்துள்ளேன் என்று இயக்குனர் என்.ராஜசேகர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களது திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தாலே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து சாதனை படைத்ததுவிடும். அஜித் விஜய் இருவர்வரும் நண்பர்களாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் இணையத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டுதான் வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அதைபோல் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க வைப்பதற்காக பல இயக்குனர்கள் கதை ரெடி செய்து கூறிவருகிறார்கள். அந்த வகையில் மாப்பிள்ளை சிங்கம், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரான என்.ராஜசேகர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் களத்தில் சந்திப்போம் படம் மாதிரி அஜித் விஜய் இருவர்களையும் சேர்த்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு ” நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் இதற்காக சம்மதம் தெரிவித்தால் கண்டிப்பாக நடக்கும். அதற்கான கதை ஒன்றை வைத்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சியமாக இயக்குவேன்” என்று கூறியுள்ளார்.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…