அதிபர் பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் – சஜித் பிரேமதாசா அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் அறிவிப்பு.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசு மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி, பொதுமக்கள் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரதமர் பதவி விலக மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது.

இதன்பின் போராட்ட களத்தில் வன்முறைகள் வெடித்தன. இதனால் இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன்பின்னரும் கொழும்புவில் போராட்டம், கலவரமாக மாறியது. போராட்ட களத்தில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியாக தகவல் வெளியாகியிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் தலைவர்கள் வீடுகளில் தீ வைக்கப்பட்டதாகவும், காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியாகவும் பரபரப்பாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இதுவரை அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள், முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரவ தொடங்கிய நிலையில், ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கண்டனம் தெரிவித்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகினால் இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்றும் இலங்கைக்கு மக்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாகவும், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி (Samagi Jana Balawegaya) தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

21 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

52 minutes ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

54 minutes ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

2 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago