RIPVijayakanth [File Image]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது.
நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து முதலில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக கட்சி அலுவலகத்தில் இருந்த விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை சென்னை தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் கேப்டன் விஜயகாந்திற்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…