தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக தலைவராக ஆர்கே செல்வமணி தேர்வாகியுள்ளார்.இதுகுறித்து பெப்சி வெளியிட்ட அறிக்கையில்,
பெப்சி என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 2021-9023ம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும், அங்கமுத்து சண்முகம் பொதுச்செயலாளராகவும், பொருளாளராக பி.என்.சுவாமிநாதனும் மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
இவர்களுடன் துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர், எஸ்.பி.செந்தில்குமார், வி.தினேஷ்குமார், தவசிராஜ் இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன், ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார், கே.ஸ்ரீபிரியா ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.இராமசாமி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பி.ஆர்.ஒ.யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் வாழ்த்தினர்.சில தினங்களில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…