சிங்கப்பூரில் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஊரடங்கை வரும் ஜூன் 1-ம் தேதி வரை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் 23,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் “பாஸ்டன் டைனமிக்ஸ்” நிறுவனம் உருவாக்கிய ரோபோ நாய், சிங்கப்பூர் நகரின் பிஷான் அங் மோ கியோ பூங்காவிற்கு வருவோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் “விலகி இருங்கள், சமூக இடைவெளி கடைப்பிடியுங்கள்” என்னும் விழிப்புணர்வு ஒலியை தொடர்ந்து ஒலித்து கொண்டு இருக்கும்.
ஒரு பராமரிப்பாளர் உதவியுடன் ரோபோ நாய் பூங்காவை சுற்றி வருகிறது.இந்த ரோபோ நாயின் உடலில் கேமரா மற்றும் விவரங்களை ஆய்வு செய்யும் சாதனங்களும் உள்ளன. இந்த ரோபோ நாயை பரிசோதனை அடிப்படையில் 2 வாரங்கள் பயன்படுத்தி பார்க்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…