சக்திமான் தொடர் முகேஷ் கண்ணா உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்தி – விளக்கமளித்த முகேஷ் கண்ணா!

Published by
Rebekal

பிரபலமான சக்திமான் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தான் ஆரோக்கியமுடன் உயிருடன் இருப்பதாக முகேஷ் கண்ணா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் என நாளுக்கு நாள் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், 90’ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவாக விளங்கிய சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் முகேஷ் கண்ணா. இவர் சக்திமான், மகாபாரதம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.

தற்பொழுது முகேஷ் கண்ணாவுக்கு தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து நடிகர் முகேஷ் கண்ணா விளக்கமளித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது, ரசிகர்களின் ஆசீர்வாதத்தால் நல்ல உடல் நலத்துடன் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் எனவும், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் முகேஷ் கண்ணா. மேலும், இது போன்ற வதந்திகள் பரப்பும் நபர்களை பிடித்து அடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

14 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

15 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

16 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago