உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா தெரிவித்திருந்தார்.
மேலும்,ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும்,அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் அணு உலை விபத்தை விட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்தார்.
இதனிடையே,உக்ரைன் லிவிவ் நகரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில்,போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்க, மத்திய அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி,உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு,பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்க 130 பேருந்துகள் தயாராக உள்ளன என்றும்,மேலும், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்கு அழைத்து வரப்படும் மாணவர்கள் விமானங்கள் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்,ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…