#BREAKING: ரஷ்யா -உக்ரைன் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் – தாலிபான்கள் அறிவுரை..!

Published by
murugan

உக்ரைன் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். அமைதியான முறையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க கோருகிறோம் என தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரில் இதுவரை உக்ரைனைச் சேர்ந்த 137 பேர் ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்துள்ளனர். பல ரஷ்ய விமானங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், உக்ரைன் விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.  வன்முறை சூழ்நிலைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தலிபான் கூறினார். ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நிலைமை குறித்து தலிபான்கள் கவலை தெரிவித்தனர்.

 உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலையார் கூறுகையில்,  800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். இதற்கிடையில், உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் அணுகுமுறை குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஏமாற்றம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

GO

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

5 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

6 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

7 hours ago