சர்வர் சுந்தரம் வெளியீடு குறித்து நடிகர் சந்தானம் பேசியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது சபாபதி மற்றும் மேலும் பெயரிடாத ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி இவரது நடிப்பில் பல ஆண்டுகளாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் படம் சர்வர் சுந்தரம்.
இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தினை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், வைபவி ஷிந்திலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகியும் இந்த படம் வெளியாகாமல் உள்ளது. இதனையடுத்து நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் அப்போது ரசிகர் ஒருவர் சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்து கேட்டுள்ளார். அதற்கு சந்தானம் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது என கூறியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…