சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் திரைப்படம் ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. படத்திலிருந்து அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சபாபதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த சந்தானத்தின் சர்வர் சுந்தரம் திரைப்படத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், சர்வர் சுந்தரம் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், வைபவி ஷிந்திலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல முறை ரிலீஸ்க்கு தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…