முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் – மே மாத செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள், அவர்கள் முன் எழுதிய தேர்வுகளின் மதிப்பெண்களையும் , உள்மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.tndte.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பார்க்குமாறு தெரிவித்துள்ளனர். மேலும் அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அரசின் தெளிவான வழிகாட்டுதல்கள் கிடைத்தவுடன் வெளியிடப்படும் என்றும், விரைவில் இறுதி ஆண்டு படித்திருந்த மாணவர்களுக்கான தேர்வுகள் விரைவில் நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…