18 வருட இடைவெளி துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தனுஷும் ஷெரீனும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
நடிகர் தனுஷ் தற்போது தொடர்ச்சியாக வெவ்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பதாக இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் ஷெரீனுடன் இணைந்து தனுஷ் துள்ளுவதோ இளமை எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்குப் பிறகு ஷெரீனும் தனுஷும் இணைந்து நடிக்கவில்லை. ஷெரீனுக்கும் அதற்கு பின்பதாக அவ்வளவாக படவாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில், கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதற்குபிறகு ஷெரீன் தொடர்ச்சியாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகி யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஷெரீன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 18 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனுஷ் ஷெரீன் ஜோடி சேர்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…