சுட்டு வீழ்த்துங்கள் – ட்ரம்பின் அதிரடி உத்தரவு.! வளைகுடா பகுதியில் பதற்றம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய படகுகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவியுள்ளார்.

உலகமே பெரும்தொற்றான கொரோனா வைரஸில் இருந்து மீள முடியாமல் திணறி வரும் நிலையில், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான போர் பதற்றம் இப்போதும் நிலவி வருகிறது. இந்த இரு நாட்டிடையே அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. பின்னர் பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 15ம் தேதி பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது.

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் சொந்தமான படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். ஈரான் கடற்படையினரின் படகுகளை சுட்டு வீழ்த்த கூறிய அதிபர் ட்ரம்பின் இந்த அதிரடி உத்தரவால் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே ஈரான் ராணுவ செயல்பாட்டிற்காக செயற்கைக்கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

1 hour ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

2 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

3 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

3 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

3 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

5 hours ago