முகம் தங்கம் போல மின்ன வேண்டுமா? இனி இதை ட்ரை பண்ணுங்க..!

Published by
Sharmi

முகம் தங்கம் போல மின்னுவதற்கு இனி இந்த டிப்ஸ்-அ வீட்டில் செய்து பாருங்கள்.

முகத்தை பராமரிப்பதில் பெண்கள் பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர். முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், தங்கம் போல மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அதை அடைவதற்கு பலரும் கிரீம்கள் தடவுவது, பேஷியல் செய்வது என்று பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். இயற்கையான பொலிவை பெறுவதற்கு எளிமையாக வீட்டிலேயே தங்கம் போல முகத்தை ஜொலிக்க வைக்க முடியும். அதற்கு என்ன செய்யலாம் என்று இன்று தெரிந்து கொள்ளலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

முள்ளங்கி (பாதியளவு)

முள்ளங்கியிலுள்ள நீர் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரித்து தோல் சுருக்கங்களைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பராமரிக்க முதன்மையாக பயன்படுகின்றன.

உருளைக்கிழங்கு (பாதியளவு)

முகம் மற்றும் சருமத்திற்கு பல வகைகளில் பேருதவியாக உருளைக்கிழங்கு இருக்கிறது. நமது சருமம் கடினமாக மாறுவதை தடுத்து ஈரப்பத தன்மையுடனும், மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது.

தயிர் (1 டேபிள் ஸ்பூன்)

தயிர் ஆரோக்கியமான உணவுப்பொருளாக மட்டுமில்லாமல் சரும பராமரிப்பிற்கும் அதிகளவு பயனுள்ளதாக இருக்கிறது. இது குளிர்ச்சி தன்மையுடையது. தயிரை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு முக பிரச்சனைகளை சரி செய்யலாம்.

சிவப்பு சந்தன பொடி (1 டேபிள் ஸ்பூன்) 

இது இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக  இருப்பவர்கள் சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். பருக்களின் தழும்பை போக்கவல்லது.

செய்முறை

முதலில் பாதியளவுள்ள முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கை நன்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை மிக்சியில் மைய அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இந்த கலவையில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சிவப்பு சந்தன பொடியை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை காயவிடுங்கள். பின்னர் முகத்தை தூய்மையான நீரால் கழுவுங்கள். இது போன்று செய்வதன் மூலம் முகம் தங்கம் போல் ஜொலிக்க செய்யும்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

47 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

52 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago