கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கவுள்ள படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’என்று டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணி ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இணைந்துள்ளனர்.அந்த இரு படங்களின் மெகா ஹிட்டிற்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் . ஹீரோயின் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே சமூக ஊடகங்களில் திரிஷா அல்லது நயன்தாரா இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அதை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை . மூன்றாவது முறையாக சிம்பு -கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணையும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களைடையே அதிகரித்துள்ளது.
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…