கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இனைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில், இந்த படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார் கோகுல். இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் அனைத்துமே முடிந்து, நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். படத்திற்கு கொரோனா குமார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இனைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இணைத்து வாலு திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…