மாநாடு படத்திலிருந்து யாரும் அறியாத தகவலை வெளியிட்ட சிம்பு .!

Published by
Ragi

மாநாடு படத்தில் சிம்பு நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்ததுடன், அதற்கான டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார் . அதனையடுத்து நேற்று முதல் புதுச்சேரியில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பானது தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் படக்குழுவினரின் பாதுகாப்பை கவனிக்க சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பொறுப்பை தயாரிப்பாளர் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் நேற்றைய தினம் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதுவரை யாருக்கும் தெரியாத தகவல் ஒன்றை கூறியுள்ளார் .  ஏற்கனவே மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனாக நடிப்பதாக கூறி வந்த நிலையில் , சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதாவது சிம்பு நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று வெளிப்படுத்தியுள்ளார் . மேலும் சிம்புவின் முகம் தெரியாத புகைப்படத்தையும் பகிர்ந்த அவரது ட்வீட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

8 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

9 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

11 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

12 hours ago