நடிகர் சிவகார்திகேயன் அடுத்ததாக இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வருகின்ற ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதைபோல் அயலான் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இயக்குனருடன் கைகோர்க்க போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…