ஜோக்கர் மால்வார் மூலம் தொடரும் தகவல் திருட்டு: “இந்த செயலிகள் இருந்தால் உடனே நீக்குங்கள்!”- கூகுள்

Published by
Surya

ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 6 செயலிகளை கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.

இதனையடுத்து டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்த நிலையில், பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தம் 224 சீன செயலிகளை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, பயனர்களின் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தலங்களின் லாகின் விவரங்களை ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் திருடப்படுவதாக கூகுள் நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த 6 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.

தடை செய்யப்பட்ட செயலிகள்:

*Convenient Scanner 2 (100,000 installs)
*Separate Doc Scanner (50,000 installs)
*Safety AppLock (10,000 installs)
*Push Message-Texting & SMS (10,000 installs)
*Emoji Wallpaper (10,000 installs)
*Fingertip GameBox (1,000 installs)

அந்த செயலிகளில் உள்நுழைய நமது பேஸ்புக், ட்விட்டர் மூலமாக லாகின் செய்யவேண்டும். அதன்மூலம் ஜோக்கர் ஹக்கர்கள், அந்த பாஸ்வர்ட் விபரங்களை வைத்து நமது மொபைலை அக்சஸ் செய்து, தகவல்களை திருடுவதாக கூறப்படுகிறது.

இந்த செயலிகள் இருந்தால் உடனே உங்கள் மொபைலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Published by
Surya

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

3 seconds ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

32 minutes ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

1 hour ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

17 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago