காலமான பிரபல நடிகையின் மகன்.! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!

Published by
Ragi

நடிகை வாணி ஸ்ரீ மகனான அபினய  வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் நடித்த பழம்பெரும் நடிகர், நடிகைகளில் சிலரை இன்றும் மனதில் நிற்பவர்கள் பலர் உள்ளனர். அவற்றுள் வசந்த மாளிகை, புண்ணிய பூமி, ஊருக்கு உழைப்பவன், நல்லதொரு குடும்பம் என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி ஸ்ரீ. இவர் தற்போது சினிமாவிலிருந்து விலகி சீரியல்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இவரது 36 வயது மகனான அபினய வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. காலையில் தூக்கத்திலிருந்து எழும்பாமல் இருந்து இவரை, சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று எழுப்புகையில் காலமானது தெரிய வந்தது. இதனையடுத்து பலர் இவர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறி வந்த நிலையில், தனது மகன் மாரடைப்பு ஏற்பட்டு தான் காலமானார் என்று வாணி ஸ்ரீ தரப்பிலிருந்து கூறியுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் தங்களது இரங்கல்களை அவரது குடும்பத்தினருக்கு அறிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago