கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண், ‘ அப்பா நலமுடன் இருக்கிறார். விரைவில் மீண்டு வருவார்’ என கூறியுள்ளார்.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், ‘ அப்பா நலமுடன் இருக்கிறார். மருத்துவர்களின் கவனிப்பால் தற்போது உடல் நலத்துடன் மீண்டு வருகிறார். விரைவில் நலமுடன் அப்பா திரும்பி வருவார். தற்போது 60 சதவீத ஆக்சிஜன் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. ரத்தம் சீராக இருக்கிறது. மருத்துவர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்களும் நம்பிக்கை வைத்துள்ளோம்.’ என கூறியுள்ளார்.
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…