லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை ஆர். ஜே. பாலாஜி பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனரான என். ஜே. சரவணனுடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் ஆர். ஜே. பாலாஜி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும், வில்லனாக விசாரணை படத்தில் நடித்த அஜய் கோஷூம் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
பக்தி படமாக உருவாகும் இந்த படத்தின் கதையை ஆர். ஜே. பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த ஆர். ஜே. பாலாஜி தனது குடும்பத்தை காப்பாற்ற போராடி வருகிறார். அந்த குடும்பத்தில் மூக்குத்தி அம்மன் நுழையும் போது அங்கு என்னென்ன நடக்கும் என்பது தான் படத்தின் கதையாம். சமீபத்தில் கூட இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படாது என்றும், திரையரங்குகளில் தான் முதலில் வெளியிடப்படும் என்று ஆர். ஜே. பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்தாண்டு வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கண்டென்கள் எப்படி மக்களிடம் கொண்டு போய் சேரந்ததோ, அதே போன்று நயன்தாரா போன்று ஸ்டார் வேல்யூ கொண்ட ஒருத்தர் நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் கண்டென்டும் வேற லெவலுக்கு ரீச்சாகும் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…