திருச்சியில் தேர்வு எழுத வந்த சாய்பல்லவியுடன் சக மாணவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய்பல்லவி கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார். மேலும் நானியுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் இவர் திருச்சியில் உள்ள சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் எப்எம்ஜிஇ(FMGE-Foreign Medical Graduate Examination) தேர்வை எழுதியுள்ளார். முககவசம் அணிந்து கொண்டு தலையில் முக்காடு போட்டு கொண்ட தேர்வு எழுதிய அவரை சக மாணவர்களால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சில நேரங்கள் கழித்து தேர்வறையில் உள்ள மாணவர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர். அதனையடுத்து தேர்வு முடிந்த பின் சக மாணவர்கள் அனைவரும் சாய்பல்லவியுடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். பிரபல நடிகையாக உள்ள சாய்பல்லவி சக மாணவர்கள் செல்ஃபி எடுக்க கேட்ட போது உடனே ஒத்துக் கொண்டதுடன் தனது முககவசசத்தையும் மாற்றி எளிமையுடன் நடந்து கொண்டதாக சக மாணவர்கள் புகழ்ந்துள்ளனர்.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…