7 செயற்கை கோள்களை எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக ராக்கெட் லேப் நிறுவனம் அறிவித்துள்ளது.
ராக்கெட் லேப் என்பது அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் விண்வெளி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ராக்கெட் போன்ற விண்வெளி சாதனங்களை தயாரித்தும், ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணியையும் செய்து வருகிறது. எனவே தனது வாடிக்கையாளர்களின் செயற்கை கோள்களை எலக்ட்ரான் என பெயரிடப்பட்டுள்ள இலகு ரக ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி வருகின்றனர்.
கடந்த 2017-ல் தொடங்கிய இந்த முயற்சியின் முடிவாக இதுவரை 11 எலக்ட்ரான் ராக்கெட் செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் அனுப்பி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 7 செய்ற்கை கோள்களுடன் கூடிய எலக்ட்ரான் ராக்கெட் ஒன்று நியூசிலாந்தின் மாகியா தீபக்கற்கத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென ராக்கெட் செயலிழந்து செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராக்கெட் லேப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இந்த சம்பவத்திற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், விரைவில் 7 செய்ற்கை கோள்களும் எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…