ஆச்சரியம்.! 100 ஒளியாண்டு தூரத்தில் பூமியை போல் மற்றொரு புதிய கோள் ஆய்வில் நாசா கண்டுபிடிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • பூமியில் இருந்து சுமார் 100 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு கோள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ‘டி.ஓ.ஐ.700டி’ என பெயரிட்டுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு பிரபஞ்சத்தில் இருக்கும் கோடிக்கணக்கான கேலக்சிகளில் பூமியைப் போல ஏதாவது கிரகம் இருக்கிறதா என்ற தேடுதலில் டெஸ் என்ற செயற்கை கோளை நாசா விண்ணில் ஏவப்பட்டது. அதில் விண்வெளியில், நட்சத்திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் சுற்றுவட்ட பாதையில் செல்கின்றனவா என்பதையும், அதனால் அந்த நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளையும் ஆய்வு செய்வது தான் இதன் டெஸ் என்ற செயற்கைகோளின் வேலை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் தற்போது அறிவித்துள்ளனர். இந்த ஆய்வில், பூமியில் இருந்து சுமார் 100 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு புதிய கோள் இருப்பதை நாசா ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ‘டி.ஓ.ஐ.700டி’ என, விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட, 20% சதவீதம் பெரிதாக காணப்படுகிறது. இந்த கோள், தன்னைத்தானே 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. பின்னர் பூமிக்கு கிடைக்கும் சூரிய சக்தியில் 87 சதவிகிதம் இந்த புதிய கோளுக்கும் கிடைப்பதாகவும் நாசா கூறியுள்ளது.

மேலும் இக்கோள், அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவிலோ அல்லது நெருங்கியோ இல்லாமல் உள்ளதால், பூமியை போல, தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக, ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா விஞ்ஞானிகள், புதிய கோளின் மூன்று மாதிரிகளை உருவாக்கி, ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, டெஸ் செயற்கைக் கோள், ‘டி.ஓ.ஐ.,700 பி, சி, டி. என்ற மூன்று கோள்களை கண்டுபிடித்துள்ளது.இதில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்தான், பூமிக்கு நெருக்கமான அம்சங்களுடன் உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

10 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

13 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

1 hour ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

5 hours ago