த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படத்திற்கு ‘ஜெய் பீம்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
நடிகர் சூர்யா தற்போது நவரசா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீட்டுள்ளது. இன்று சூர்யா தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வகையில் சூர்யாவின் 39 வது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியீடபட்டுள்ளது. இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படத்திற்கு ‘ஜெய் பீம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை சூர்யா 2 டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜீஷா விஜயன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…